எல்லோரும் இதயத்தில் எண்ணி துயர் கொண்டாலும்
பல்லோரும் பார்த்து புரிந்த பொல்லா நாட்கள் நினைவை
வென்று வரும் செய்தி இன்று இல்லாத ஒன்று உண்மைதான் ,
நன்று ,நன்று ,இன்று ,ஆனாலும் நாளை என்று,அந்த வேளை வரும்
மன்று ஒன்றில் கூடும் ,நீதி தேவன் , நமக்கு தரும் தீர்ப்பு காத்திருப்போம் !
கண்ணால் கண்டோம் ,காதால் கேட்டறிந்தோம் , கதை கள் பல படித்தோம் ,
முன்னால் புரிந்த வற்றை முறை யாக தெரிந்து கொண்டால் உலகம்
வழங்கும் கூலி யாருக்கு என்பதையும் நாம் அறிவோம் ,நாளை அந்த வேளை !
Donnerstag, 28. Oktober 2010
Mittwoch, 6. Oktober 2010
என் பாட்டு இன்று -1
கண் பூத்த வேளையில் கவலை மட்டும்
பொன் போன்ற மண்ணிலே பொய்ம்மை காட்டும்,
விண் பூத்த வானத்தின் வெளிச்சம் போல ,
மண் பார்த்த மக்களின் மனங்கள் தோறும் !
நீல வானின் கீழ் நீண்ட நிலமெங்கும்
கோல இயற்கை வண்ணம் போல
கால மகள் வரைந்த அந்த எழில் கூடம் ,
சீலம் நிறைந்தது போல சின்ன மழைத்துளிகள்
மாலை ஒளி மறைய கண் மூடும் நேரத்தில்
மண்ணில் வாழும் மனிதன் மயங்கிடும் வேளையில் ,
" மேகத்தில் திரை போட்டு முத்தாக கோடிட்டு ,
மலை முகட்டு உச்சியிலே மத யானை கூட்டம்,
தாகத்தில் நீர் தேடும் தாவியோடும் மான் கூட்டம் ,
தூரத்தில் சிறகு அடிக்கும் சிறு பறவை கூட்டம் ,
வேகத்தில் முகிற் கூட்டம் வேறாகி பிரியும் அந்த நேரம் ,
வையத்து வாழ்க்கையும் இது தான் என்று கூறி ஓடும் !
மோனத்தில் என் எண்ணப் பறவையும் உள்ளத்தில்
கணத்தில் கனவாகி காலத்தின் புதுமை காட்டும் !
பொன் போன்ற மண்ணிலே பொய்ம்மை காட்டும்,
விண் பூத்த வானத்தின் வெளிச்சம் போல ,
மண் பார்த்த மக்களின் மனங்கள் தோறும் !
நீல வானின் கீழ் நீண்ட நிலமெங்கும்
கோல இயற்கை வண்ணம் போல
கால மகள் வரைந்த அந்த எழில் கூடம் ,
சீலம் நிறைந்தது போல சின்ன மழைத்துளிகள்
மாலை ஒளி மறைய கண் மூடும் நேரத்தில்
மண்ணில் வாழும் மனிதன் மயங்கிடும் வேளையில் ,
" மேகத்தில் திரை போட்டு முத்தாக கோடிட்டு ,
மலை முகட்டு உச்சியிலே மத யானை கூட்டம்,
தாகத்தில் நீர் தேடும் தாவியோடும் மான் கூட்டம் ,
தூரத்தில் சிறகு அடிக்கும் சிறு பறவை கூட்டம் ,
வேகத்தில் முகிற் கூட்டம் வேறாகி பிரியும் அந்த நேரம் ,
வையத்து வாழ்க்கையும் இது தான் என்று கூறி ஓடும் !
மோனத்தில் என் எண்ணப் பறவையும் உள்ளத்தில்
கணத்தில் கனவாகி காலத்தின் புதுமை காட்டும் !
Samstag, 25. September 2010
ஈழவள நாடு -கவிதை -1
மின்னும் முத்தும் மணியும் மீனும்
மிக நிறைந்த கடல் சூழும் எங்கள் நாடு
விளைபொருள் வளங்குன்றா வீடு தோறும்
வையமதில் புகழ் மிக்க வரலாறும்
வளையா நெறி வாழும் மக்கள் பண்பும்
வலு மிக்க வன்னி மன்னன் பண்டார வன்னி நாடும்
வரலாறு கொண்ட எங்கள் நாடாம் !
நித்தம் நித்தம் தொழில் நிறைந்த இந்த நாடு
நெய்தலும் மருதமும் கை கோத்த மாட்சி
பித்தம் பிடிக்கும் அதன் பேரின்பம்!
பிறந்த பொன் நாட்டில் அன்றி வேறு எங்குண்டு?
கண்டாரும் கதை கேட்டு கொண்டாரும்
கட்டபொம்மன் பண்டாரவன்னி நட்பின்
எட்டு திசை எட்ட எடுத்து கூறாமல் எப்படிஇருப்பார் ?
கொண்டா டி மகிழ்வுற்று பெருமை காண்பர் !
மண்டியிட்டு தலை வணங்காது மறக்குல மன்னன் ,
வண்டாடும் வன்னி மலர்ச்சோலை நாட்டின் வீரன் !
சண்ட்டளர் சதியாளர் கூட்டம் செய்த சதியால்
அக்டோபர் முப்பதொன்று ஆயிரத்து எண்ணுற்று பதின் ஒன்றில்
ஆங்கிலர் ஆட்சியில் வீழ்ச்சி ஆனான் !
நெடுங்காடு வளம் கொண்ட எங்கள் நாடு,
நடுங்கா புகழ் படைத்த அன்னை மண்ணில் ,
நெடுங்காமம் வரை நீண்ட பெரு நிலத்தில் ,
கண்டாரும் நடுங்க படை கொண்ட பண்டார வன்னி முன்
கைலாய வன்னி ஆண்ட எம் பூமி !
மிக நிறைந்த கடல் சூழும் எங்கள் நாடு
விளைபொருள் வளங்குன்றா வீடு தோறும்
வையமதில் புகழ் மிக்க வரலாறும்
வளையா நெறி வாழும் மக்கள் பண்பும்
வலு மிக்க வன்னி மன்னன் பண்டார வன்னி நாடும்
வரலாறு கொண்ட எங்கள் நாடாம் !
நித்தம் நித்தம் தொழில் நிறைந்த இந்த நாடு
நெய்தலும் மருதமும் கை கோத்த மாட்சி
பித்தம் பிடிக்கும் அதன் பேரின்பம்!
பிறந்த பொன் நாட்டில் அன்றி வேறு எங்குண்டு?
கண்டாரும் கதை கேட்டு கொண்டாரும்
கட்டபொம்மன் பண்டாரவன்னி நட்பின்
எட்டு திசை எட்ட எடுத்து கூறாமல் எப்படிஇருப்பார் ?
கொண்டா டி மகிழ்வுற்று பெருமை காண்பர் !
மண்டியிட்டு தலை வணங்காது மறக்குல மன்னன் ,
வண்டாடும் வன்னி மலர்ச்சோலை நாட்டின் வீரன் !
சண்ட்டளர் சதியாளர் கூட்டம் செய்த சதியால்
அக்டோபர் முப்பதொன்று ஆயிரத்து எண்ணுற்று பதின் ஒன்றில்
ஆங்கிலர் ஆட்சியில் வீழ்ச்சி ஆனான் !
நெடுங்காடு வளம் கொண்ட எங்கள் நாடு,
நடுங்கா புகழ் படைத்த அன்னை மண்ணில் ,
நெடுங்காமம் வரை நீண்ட பெரு நிலத்தில் ,
கண்டாரும் நடுங்க படை கொண்ட பண்டார வன்னி முன்
கைலாய வன்னி ஆண்ட எம் பூமி !
Freitag, 17. September 2010
ஈழ வள நாடு - (தொடர்) -2
கண்டாரும்வியக்க களம் பல கண்டவன்
கை வாளின் வீச்சில் கலை வண்ணம் காட்டியவன்,
கொண்டாட என்றும் ,மானம் காத்த வீரன் அன்று !
( இத்துடன் ,கவிதை நிறைவு )
கை வாளின் வீச்சில் கலை வண்ணம் காட்டியவன்,
கொண்டாட என்றும் ,மானம் காத்த வீரன் அன்று !
( இத்துடன் ,கவிதை நிறைவு )
ஈழவள நாடு -2
முத்தும் மணியும் மீனும் மிக நிறைந்து
சூழும் கடல் கொண்ட எங்கள் நாடு,
விளை பொருள் பலவும் வளங்குன்றா வாழ்வும்
வையமதில் புகழ் மிக்க வரலாறும்
வளையா வாழ்க்கை பண்பாடும் கொண்டு
வன்னி மண்ணில் வாழ்ந்த பண்டார வன்னிமன்னன்
குறையாத கதை என்றும் நிலைத்த ஒன்று ,
கண்டாரும் அவன் கதை கேட்டுக் கொண்டாரும்
கடட்ட பொம்மன் பண்டரவன்னியன் நட்பு
கொண்டாடி மகிழ்வுறுவர்,பெருமை காண்பர்,
கை வாளின் வீச்சு கலைக்கு ஒருவன் அவன் என்பர் ,
சண்டாளர் கூட்டம் சிதைந்து ஓட வைத்தான் ,
சதி காரர் கும்பல் பகை வீழ செய்தவன் ,
வண்டாடும் மலர் சோலை வன்னி நாடு ,அவன்
வீர வரலாறு கொண்டாடி மகிழ்வர் என்றும் !
நெடுங்காடு நிறைந்த வளம் கொண்ட வன்னி நாட்டின்
நடுங்காப் புகழ் படைத்த ஆங்கில ஆட்சியரை ..........
சூழும் கடல் கொண்ட எங்கள் நாடு,
விளை பொருள் பலவும் வளங்குன்றா வாழ்வும்
வையமதில் புகழ் மிக்க வரலாறும்
வளையா வாழ்க்கை பண்பாடும் கொண்டு
வன்னி மண்ணில் வாழ்ந்த பண்டார வன்னிமன்னன்
குறையாத கதை என்றும் நிலைத்த ஒன்று ,
கண்டாரும் அவன் கதை கேட்டுக் கொண்டாரும்
கடட்ட பொம்மன் பண்டரவன்னியன் நட்பு
கொண்டாடி மகிழ்வுறுவர்,பெருமை காண்பர்,
கை வாளின் வீச்சு கலைக்கு ஒருவன் அவன் என்பர் ,
சண்டாளர் கூட்டம் சிதைந்து ஓட வைத்தான் ,
சதி காரர் கும்பல் பகை வீழ செய்தவன் ,
வண்டாடும் மலர் சோலை வன்னி நாடு ,அவன்
வீர வரலாறு கொண்டாடி மகிழ்வர் என்றும் !
நெடுங்காடு நிறைந்த வளம் கொண்ட வன்னி நாட்டின்
நடுங்காப் புகழ் படைத்த ஆங்கில ஆட்சியரை ..........
Donnerstag, 16. September 2010
ஈழ வளநாடு -3
மின்னும் மணியும் வெண்முத்தும் சங்கும்
நண்ணும் நளிநீர் நிலைகளும் சேர விளங்கும் நிலம்
தாங்கும் வங்கக் கடலுடன் நீளும் இந்துமா மத்தியில்
தங்க மாங்கனி போன்று திகழும் இந்த நம் ஈழவள நாடு காண்!
நீர மகிளிர் முழு நிலவில் நீந்தும் மட்டு வாவி தனில்
தேரா தொன்மை கதை ஒன்று தெரிந்தவர் கூறும் மரபினில்
தென்துறை வாவி பாயும் புதுமை ஒன்று உண்டு என்பர் !
முன்னவர் கதையும் பொய்யல்ல மட்டுநகரின் வரலாறும் !
மலை நாடு வளமாகும் மலைக்க செய்யும்
மன்னாரில் கடல் முத்து மாதோட்ட வரலாறு மலைக்கவைக்கும்,
நிலையான நீர் ஊற்று மாவலி நீள் ஆறு ,
நினைவு ஊட்டி சங்கமிக்கும் திருமலை துறையில் ,
சதிராடும் கொடி படரும் காடுசார் பூமி ,
சிங்கரா எழில் சேர்ந்த வன்னி பெருநிலமும் ,
புதிரோடு வரலாறு கூறும் புவி ஆண்ட கண்டி அரசும்
கதிராடும் கண்கவரும் சிகிரி மலை முகடும் .
கலை அழகு மிளிரும் ஓவியங்கள் கொண்ட இந்த நாடு !
உதிராத நெற்கதிர்கள் மலை போல குவியும்
உணவுக் களஞ்சியம் மட்டுநர் பட்டிப்பளை ஆறு !
நண்ணும் நளிநீர் நிலைகளும் சேர விளங்கும் நிலம்
தாங்கும் வங்கக் கடலுடன் நீளும் இந்துமா மத்தியில்
தங்க மாங்கனி போன்று திகழும் இந்த நம் ஈழவள நாடு காண்!
நீர மகிளிர் முழு நிலவில் நீந்தும் மட்டு வாவி தனில்
தேரா தொன்மை கதை ஒன்று தெரிந்தவர் கூறும் மரபினில்
தென்துறை வாவி பாயும் புதுமை ஒன்று உண்டு என்பர் !
முன்னவர் கதையும் பொய்யல்ல மட்டுநகரின் வரலாறும் !
மலை நாடு வளமாகும் மலைக்க செய்யும்
மன்னாரில் கடல் முத்து மாதோட்ட வரலாறு மலைக்கவைக்கும்,
நிலையான நீர் ஊற்று மாவலி நீள் ஆறு ,
நினைவு ஊட்டி சங்கமிக்கும் திருமலை துறையில் ,
சதிராடும் கொடி படரும் காடுசார் பூமி ,
சிங்கரா எழில் சேர்ந்த வன்னி பெருநிலமும் ,
புதிரோடு வரலாறு கூறும் புவி ஆண்ட கண்டி அரசும்
கதிராடும் கண்கவரும் சிகிரி மலை முகடும் .
கலை அழகு மிளிரும் ஓவியங்கள் கொண்ட இந்த நாடு !
உதிராத நெற்கதிர்கள் மலை போல குவியும்
உணவுக் களஞ்சியம் மட்டுநர் பட்டிப்பளை ஆறு !
ஈழவள நாடு -கவிதை -4
அலை பாயும் ஆழகடல் சூழ் யாழ் குட நாடு
அரசமர்ந்த பலரில் சங்கிலிகுமாரன் வரை ,
ஆண்டு பலகொண்ட தமிழ் வீடு!
சதி ராடும்கொடிபடரும் கடு சார் பூமி ,
சிங்கரா எழில்சேர சிறந்த வன்னி நாடு,
புதிரோடு தமிழரசு கண்ட கண்டி அரசன் ,
புவியாண்ட மன்னன் ராசசிங்கன் பெயரன் ,
கதிர் ஆட கண்கவரும் சிகிரியா மலை முகடு ,
கலை அழகு மிக்க ஓவியங்கள் உண்டு!
உதிராத நெற்கதிர்கள் மலைபோல குவியும்
உணவுக் களஞ்சியம் மட்டு நகர் பட்டிபளை அறு!
நெய்தலும் மருதமும் கைகோர்த்து நிக்கும் ,
நெல் மணி மீன் மிதமாக கிட்டும் ,
செய் தொழில் வளம் சேர்க்கும் சீர்மிகு பூமி ,
செம்மலை அலம்பில் தென்னமர வாடி,
பொய் இல்ஆ பெரு நிலம் முல்லையின் அங்கம்!
புகை இலை வெங்காயம் மிளகாய் பொலிந்து விளையும் ,
தொய்விலா பலன் தரு தொழில் சார் பூமி !
தொகை மிகு வளம் சேர் நம் நாடு !
அரசமர்ந்த பலரில் சங்கிலிகுமாரன் வரை ,
ஆண்டு பலகொண்ட தமிழ் வீடு!
சதி ராடும்கொடிபடரும் கடு சார் பூமி ,
சிங்கரா எழில்சேர சிறந்த வன்னி நாடு,
புதிரோடு தமிழரசு கண்ட கண்டி அரசன் ,
புவியாண்ட மன்னன் ராசசிங்கன் பெயரன் ,
கதிர் ஆட கண்கவரும் சிகிரியா மலை முகடு ,
கலை அழகு மிக்க ஓவியங்கள் உண்டு!
உதிராத நெற்கதிர்கள் மலைபோல குவியும்
உணவுக் களஞ்சியம் மட்டு நகர் பட்டிபளை அறு!
நெய்தலும் மருதமும் கைகோர்த்து நிக்கும் ,
நெல் மணி மீன் மிதமாக கிட்டும் ,
செய் தொழில் வளம் சேர்க்கும் சீர்மிகு பூமி ,
செம்மலை அலம்பில் தென்னமர வாடி,
பொய் இல்ஆ பெரு நிலம் முல்லையின் அங்கம்!
புகை இலை வெங்காயம் மிளகாய் பொலிந்து விளையும் ,
தொய்விலா பலன் தரு தொழில் சார் பூமி !
தொகை மிகு வளம் சேர் நம் நாடு !
கவிதைகள் - மழலை தரும் இன்பம்
நினைக்கும் பொழுது இனிக்கும் சிறுமதலை
நெஞ்சை நிறைக்கும் துயரை ஒழிக்கும் ,
தலையசைத்து கைவீசி கவலை மறைக்கும் ,
தன்னை மறந்து மனம் இனிக்க வைக்கும் மதலைசெல்வம்!
சின்ன பூ கை வீசி சிரிக்கும் போதில்
தென்னம்பூ பல்வரிசை சிந்தை நிறைக்கும் ,
மின்னல் ஒத்த கண் ஒளியும் சின்ன மூக்கும்
கன்னல் வெல் சொல்லின் கனிவும்
களிப்பூட்டும் மதலைக்கு மட்டும் சொந்தம் !
புளிக்கும் புளியங்காய் புசிக்கும் மனிதன்
புன்னகைக்க சிரிப்பை அள்ளித்தரும் !
நெஞ்சை நிறைக்கும் துயரை ஒழிக்கும் ,
தலையசைத்து கைவீசி கவலை மறைக்கும் ,
தன்னை மறந்து மனம் இனிக்க வைக்கும் மதலைசெல்வம்!
சின்ன பூ கை வீசி சிரிக்கும் போதில்
தென்னம்பூ பல்வரிசை சிந்தை நிறைக்கும் ,
மின்னல் ஒத்த கண் ஒளியும் சின்ன மூக்கும்
கன்னல் வெல் சொல்லின் கனிவும்
களிப்பூட்டும் மதலைக்கு மட்டும் சொந்தம் !
புளிக்கும் புளியங்காய் புசிக்கும் மனிதன்
புன்னகைக்க சிரிப்பை அள்ளித்தரும் !
Dienstag, 13. Juli 2010
எனது இன்றைய எண்ணங்கள்
காலமும் கருத்துகளும் என்றும் ,ஒன்று என ,என்றும் ,இருந்ததில்லை மற்றும்
ஒருகருத்து ,என்றும் ,எல்லோருக்கும் ஏற்புடையதும் அன்றே ! காலந்தோறும்
தோன்றும் ,அறிஞகளால் கூறப்படும் ,கருத்துகள் ,பின் நாளில் ,தூக்கி ,வீசவும்
படலாம்!காலமாற்றம் ,என்பது,பருவங்களின் மாறுதல் மட்டும் ,என்று கொள்ள-
முடிவதில்லை .கருத்தும் ,கூட ,அவ்வப்போது ,தலைகீழ் ,மாற்றம்,காண்பதும்
உண்டு .பூமி ,உருண்டை ,என்று ,கலிலியோ ,நிருவமுற்பட்டதால் நேர்ந்த ,
கொடுமை ,தீர ,ஐந்து நூற்றாண்டு காலம் தேவைபட்டது ,நாம்,அறிந்த உண்மை
ஆனாலும் ,உண்மை,நீதி,இயற்கை ,பூமி ,வானம்,கடல் ,உயிர் ,உடல் நீர் ,அன்பு
கோபம் ,இரக்கம்,பசி ,பாசம் ,போன்ற ,மனித பண்புகள் ,மனிதன் ,தோன்றி ,
இன்று வரை ,ஒன்று போல இருப்பதில் ,மாற்றம் இல்லையல்லவா?
கனவுகளும் - நினைவுகளும்
கனவு என்பது ,நிறைவேறாத விருப்பங்கள் ,ஆசைகள் ,குறிக்கோள் ,
என்று கூறலாமா? என்ற கேள்வி , சிந்திக்கும் ,ஒவொரு மனிதர் உள்ளத்திலும்
எழும் கேள்வி ,எனின் ,தவறில்லை !எதனையும் ,கடந்த கால ,அனுபவ வாயிலாக ,எண்ண வடிவமாக்கி , அலையவிடும் மனதின் ,மடத்தன ,
நடைத்தை காரணமாக , கவனம் , சக்தி ,உழைப்பு ,யாவும் ,வீணாகி ,
வாழ் ,அமைதி இழந்து ,துன்பம் எய்துவதை ,அனுபவமாக கொள்ளவேண்டி -
உள்ளது !இதன் போக்கால் ,மனம் ,கெடுவது மட்டு மன்றி ,தனது மனம்
பற்றிய ,ஆசை ,குறிக்கோளை ,அடைய , முடிந்த எல்லாவற்றையும் ,மேற்கொள்ள ,புலன்களின் துணையுடன் ,மூர்க்கம் கொள்ளகிறது !
இதன் ,விளைவு ,கோபம் , அநீதி , பேராசை , வன்செயல் ,கொடுமை ,
போராட்டம் , என ,தீய வழிகளை தேர்ந்தெடுத்து ,தீராத ,இடர்களை புரிய
முற்பட்டு ,வாழ்வை பாழாக்கி ,அழிந்து போவதற்கு ,மனித மனம் ,துணை
போவதை காணமுடிகிறது !
ஒருகருத்து ,என்றும் ,எல்லோருக்கும் ஏற்புடையதும் அன்றே ! காலந்தோறும்
தோன்றும் ,அறிஞகளால் கூறப்படும் ,கருத்துகள் ,பின் நாளில் ,தூக்கி ,வீசவும்
படலாம்!காலமாற்றம் ,என்பது,பருவங்களின் மாறுதல் மட்டும் ,என்று கொள்ள-
முடிவதில்லை .கருத்தும் ,கூட ,அவ்வப்போது ,தலைகீழ் ,மாற்றம்,காண்பதும்
உண்டு .பூமி ,உருண்டை ,என்று ,கலிலியோ ,நிருவமுற்பட்டதால் நேர்ந்த ,
கொடுமை ,தீர ,ஐந்து நூற்றாண்டு காலம் தேவைபட்டது ,நாம்,அறிந்த உண்மை
ஆனாலும் ,உண்மை,நீதி,இயற்கை ,பூமி ,வானம்,கடல் ,உயிர் ,உடல் நீர் ,அன்பு
கோபம் ,இரக்கம்,பசி ,பாசம் ,போன்ற ,மனித பண்புகள் ,மனிதன் ,தோன்றி ,
இன்று வரை ,ஒன்று போல இருப்பதில் ,மாற்றம் இல்லையல்லவா?
கனவுகளும் - நினைவுகளும்
கனவு என்பது ,நிறைவேறாத விருப்பங்கள் ,ஆசைகள் ,குறிக்கோள் ,
என்று கூறலாமா? என்ற கேள்வி , சிந்திக்கும் ,ஒவொரு மனிதர் உள்ளத்திலும்
எழும் கேள்வி ,எனின் ,தவறில்லை !எதனையும் ,கடந்த கால ,அனுபவ வாயிலாக ,எண்ண வடிவமாக்கி , அலையவிடும் மனதின் ,மடத்தன ,
நடைத்தை காரணமாக , கவனம் , சக்தி ,உழைப்பு ,யாவும் ,வீணாகி ,
வாழ் ,அமைதி இழந்து ,துன்பம் எய்துவதை ,அனுபவமாக கொள்ளவேண்டி -
உள்ளது !இதன் போக்கால் ,மனம் ,கெடுவது மட்டு மன்றி ,தனது மனம்
பற்றிய ,ஆசை ,குறிக்கோளை ,அடைய , முடிந்த எல்லாவற்றையும் ,மேற்கொள்ள ,புலன்களின் துணையுடன் ,மூர்க்கம் கொள்ளகிறது !
இதன் ,விளைவு ,கோபம் , அநீதி , பேராசை , வன்செயல் ,கொடுமை ,
போராட்டம் , என ,தீய வழிகளை தேர்ந்தெடுத்து ,தீராத ,இடர்களை புரிய
முற்பட்டு ,வாழ்வை பாழாக்கி ,அழிந்து போவதற்கு ,மனித மனம் ,துணை
போவதை காணமுடிகிறது !
Sonntag, 4. Juli 2010
மனவோட்டம்
மனவோட்டம் ;ஒருவரின் மனவோட்டம் ;மாற்றார் அறிய முடியா;என்பது
தெரிந்தாலும் ;அதனை ;அறிவதில் ;எத்தனை வேகம் உண்டு ;என்பது ;எல்லாரும்
உணர்வர் !கணவன் ,மனைவி ,பிள்ளை ,உறவு ,நட்பு , எல்லோருக்கும் இது ,
பொருந்தும்!எல்லோர்உள்ளங்களிலும் ,எதோ ஒன்று ,மறைந்து இருக்கும் ,
என்பதை ,அனைவரும் ,ஏற்பார் !கடல்ஆழத்தை கணக்கிட முடிந்தாலும் ,மனதின்
ஆழத்தை -அதுவும் ,மனித மனதை கண்டறிய முடியதென்பர்,என்பது,பேருண்-
மை ,எனில் ,தவறில்லை .
தெரிந்தாலும் ;அதனை ;அறிவதில் ;எத்தனை வேகம் உண்டு ;என்பது ;எல்லாரும்
உணர்வர் !கணவன் ,மனைவி ,பிள்ளை ,உறவு ,நட்பு , எல்லோருக்கும் இது ,
பொருந்தும்!எல்லோர்உள்ளங்களிலும் ,எதோ ஒன்று ,மறைந்து இருக்கும் ,
என்பதை ,அனைவரும் ,ஏற்பார் !கடல்ஆழத்தை கணக்கிட முடிந்தாலும் ,மனதின்
ஆழத்தை -அதுவும் ,மனித மனதை கண்டறிய முடியதென்பர்,என்பது,பேருண்-
மை ,எனில் ,தவறில்லை .
Abonnieren
Kommentare (Atom)
